தமிழ்நாடு
சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீட்டிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், பேரவையில் இன்று 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட அவர், 'சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 58லிருந்து 60 ஆக நீட்டிக்கப்படும்' என அறிவித்துள்ளார்.
அதேபோல அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

