புனித வெள்ளி
புனித வெள்ளிpt desk

'புனித வெள்ளி சிலுவை பாடு நிகழ்வு' - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

புனித வெள்ளியையொட்டி சேலத்தில் நடைபெற்ற சிலுவை பாடு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Published on

செய்தியாளர்: மோகன்ராஜ்

இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சேலத்தில் சிலுவை பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அரிசிப்பாளையம் தூய மரியன்னை பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய இந்த சிலுவைப்பாதை பயணத்தை வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சாதிமத வேறுபாடின்றி பார்வையிட்டு இயேசுபிரானை தொழுதனர்.

இந்த சிலுவை பாடு புனித பயணத்தின் போது 12 ஸ்தலங்களில் உயிர் ஓவிய நிகழ்ச்சி நடத்தப்பட்டு இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு நினைவு கூறப்பட்டது. சிலுவையை சுமந்தபடி இயேசுபிரான் முள்கிரீடம் அணிவித்து சாட்டையால் அடித்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகள் சிலுவை பாடு பயணத்தில் தத்ரூபமாக இடம்பெற்றது.

புனித வெள்ளி
"தவெக சட்டப்போராட்டத்தின் வெற்றி!" வழக்கறிஞர் டீமிடம் விஜய் சொன்னது! ஓபனாக பேசிய ஆதவ் அர்ஜுனா!

இதையடுத்து நான்கு ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் சிலுவை பாடு பயணம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து குழந்தை இயேசு பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com