மழை வெள்ளத்தில் சிக்கிய ஆடுகள்: பத்திரமாக மீட்ட மத்திய மண்டல ஐ.ஜி.!

மழை வெள்ளத்தில் சிக்கிய ஆடுகள்: பத்திரமாக மீட்ட மத்திய மண்டல ஐ.ஜி.!
மழை வெள்ளத்தில் சிக்கிய ஆடுகள்: பத்திரமாக மீட்ட மத்திய மண்டல ஐ.ஜி.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீர் புகுந்துள்ள வீடுகளில் சிக்கியிருந்த ஆடுகளை, மத்திய மண்டல ஐஜி ஜெயராம் தலைமையிலான காவல்துறையினர் மீட்டனர்.

புரெவி புயல் காரணமாக தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ராதாநல்லூர், தாண்டவபுரம் போன்ற தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் வீடுகளுக்குள் ஆடு போன்ற கால்நடைகள் சிக்கியிருந்தன.

இந்நிலையில் அந்த பகுதிக்கு வந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் தலைமையில் போலீசார் தாழ்வான பகுதிகளில் உள்ள 50 வீடுகளில் சிக்கியிருந்த ஆடுகளை மீட்டு வந்தனர். இதையடுத்து அங்குள்ள சிறு குழந்தைகளுக்கு பிஸ்கட்களையும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் வழங்கியுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com