3-வது மாடியில் அறைக்குள் சிக்கித் தவித்த சிறுமி - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை

3-வது மாடியில் அறைக்குள் சிக்கித் தவித்த சிறுமி - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை
3-வது மாடியில் அறைக்குள் சிக்கித் தவித்த சிறுமி - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை

சென்னையில் 3-வது மாடி வீட்டினுள் உள் பக்கமாக பூட்டி சிக்கிக்கொண்ட சிறுமியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சென்னை விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 7 வயது சிறுமி சாய் கிராணா தனது வீட்டிற்குள் யாருமில்லாத நேரத்தில் உள் பக்கமாக பூட்டிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் வெளியே சென்று திரும்பிய பெற்றோர், சிறுமி வீட்டிற்குள் சிக்கிக் கொண்டதால் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பெற்றோர், தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரிய ஏணி மூலம் பின்புறம் வழியாக 3-வது மாடியில் ஏறி சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

சிறுமியை கண்டதும் மகிழ்ச்சியடைந்த பெற்றோர் தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். இதனை கண்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தீயணைப்புத் துறையினரை பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com