மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் விலகல்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து ஒவ்வொருவராக விலகிக் கொண்டிருக்கிறார்கள். ஆர். மகேந்திரன், முருகானந்தம், சந்தோஷ் பாபு, பத்மப்ரியா உள்ளிட்ட  முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி உள்ளனர். 

இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளரான சி.கே.குமரவேல்மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனிமனித பிம்பத்தை சார்ந்திருக்கிற அரசியலை விடவும் மதச்சார்பற்ற ஜனநாயக பாதையில் பயணிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ள அவர், தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததற்கு கமலின் அரசியல் ஆலோசகர்களும், அவரது வழிநடத்தலுமே மட்டுமே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com