காதல் திருமணம் செய்த ஜோடி மீது தாக்குதல் - புதுமணப்பெண்ணை கடத்திச் சென்ற கும்பல்

காதல் திருமணம் செய்த ஜோடி மீது தாக்குதல் - புதுமணப்பெண்ணை கடத்திச் சென்ற கும்பல்
காதல் திருமணம் செய்த ஜோடி மீது தாக்குதல் - புதுமணப்பெண்ணை கடத்திச் சென்ற கும்பல்

சேலம் மாவட்டம் ஓமலூரில் காதல் திருமணம் செய்த ஜோடியை தாக்கி, புதுமணப்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓமலூரைச் சேர்ந்த ஜூவா - தீபா ஆகியோர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். தீபாவின் குடும்பத்தார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்து வந்ததாகக்கூறி புதுமண தம்பதிகள் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பெண் வீட்டாரை அழைத்து பேசிய காவலர்கள், புதுமண தம்பதிக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்கக்கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து காவல்நிலையத்திலிருந்து காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, காரை வழிமறித்த ஒரு கும்பல், ஜீவா-தீபா தம்பதியை தாக்கியதோடு, ஜீவாவின் தந்தை மீதும் தாக்குதல் நடத்திவிட்டு, தீபாவை கடத்தி சென்றுள்ளது. இதுகுறித்து மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com