“ஒழுங்கா 1000ரூவா கொடுத்துடு”-பேக்கரியில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டல்; திருவள்ளூரில் பயங்கரம்!

திருவள்ளூரில் மாமூல் கேட்டு, தர மறுத்ததால், பேக்கரி கடையின் பெண் உரிமையாளரை அரிவாள் காட்டி மிரட்டும் ரவுடி கும்பலின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
மிரட்டிய கும்பல்
மிரட்டிய கும்பல்pt web

திருவள்ளூரில் உள்ள ஒரு பேக்கரி கடைக்கு வரும் மூவர் கடையில் இருந்த பெண் உரிமையாளரிடம் 1000 ரூபாய் கேட்கின்றனர். அவர் 200 ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் ஆயிரம் ரூபாய் கேட்டால் 200 ரூபாய் தருகிறாயா என அப்பெண்ணை அரிவாளை காட்டி மிரட்டுகின்றனர்.

தொடர்ந்து கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு கல்லாவில் இருந்த 700 ரூபாயை எடுத்துச்சென்றனர். மேலும் இதுகுறித்து காவல் நிலைத்தில் புகார் அளித்தால் கணவன், மனைவி என இருவரும் உயிருடன் இருக்க மாட்டீர்கள் என எச்சரித்து சென்றதாகவும் தெரிகிறது. தற்போது இதுதொடர்பான கண்காணிப்பு காட்சி வெளியாகி உள்ளது. இந்த காட்சிகளை பார்த்து பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com