கிருமிநாசினி வைத்து விளையாடியபோது தீ விபத்து... சிறுவர்கள் காயம்

கிருமிநாசினி வைத்து விளையாடியபோது தீ விபத்து... சிறுவர்கள் காயம்
கிருமிநாசினி வைத்து விளையாடியபோது தீ விபத்து... சிறுவர்கள் காயம்

காஞ்சிபுரம் அருகே கிருமிநாசினியில் தீக்குச்சி வைத்து விளையாடியபோது தீ பரவியதால் சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த சிறு காவேரிப்பாக்கம் சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயவேல்-பொற்செல்வி தம்பதியினரின் மகன் பிரகாஷ் (11).
ஆண்டாள் நகரைச் சேர்ந்த தாமோதரன் சத்தியா தம்பதியினரின் ஏழு வயது மகன் முகுந்தன். இந்தச் சிறுவர்கள் ஜெயவேல் வீட்டருகே கட்டைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த கிருமிநாசினியை எடுத்து  கட்டையின் மேல் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளனர். தீ மள மளவென எரிய ஆரம்பித்து சிறுவர்களிடம் பரவத் தொடங்கியுள்ளது.

உடனே அவர்கள் தண்ணீரை தங்களது உடம்பில் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதில் முகுந்தனுக்கு கழுத்து மற்றும் நெஞ்சுப்பகுதியில் தீக்காயமும் பிரகாஷூக்கு தோள்பட்டை மற்றும் இடது மார்பிலும் தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவருக்கும் 18 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதால் அவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com