"கொங்குநாட்டின் வருங்கால முதல்வரே" : அண்ணாமலையை வரவேற்று நாமக்கல்லில் பாஜகவினர் பேனர்

"கொங்குநாட்டின் வருங்கால முதல்வரே" : அண்ணாமலையை வரவேற்று நாமக்கல்லில் பாஜகவினர் பேனர்

"கொங்குநாட்டின் வருங்கால முதல்வரே" : அண்ணாமலையை வரவேற்று நாமக்கல்லில் பாஜகவினர் பேனர்
Published on

கொங்குநாட்டின் வருங்கால முதல்வரே என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாமக்கல்லில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்கும் அண்ணாமலைள் இன்று மாலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கட்சி தொண்டர்களை சந்திக்க வருகை தந்தார். இதனையொட்டி நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அண்ணாமலையை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதன் ஒருபகுதியாக நாமக்கல் நகரின் பல முக்கிய சாலை சந்திப்புகளில் பாஜக கொடியும், அண்ணாமலையை வரவேற்று பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டன.

இந்நிலையில், நாமக்கல் மணிக்கூண்டு பகுதியில் நாமக்கல் பாரதிய ஜனதா கட்சியின் நகர கிளை சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் ’’கொங்குநாட்டின் வருங்கால முதல்வரே’’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. அண்மையில் மத்திய இணைய அமைச்சரான எல்.முருகன் தன் சுய விவர குறிப்பில் கொங்குநாடு என குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனரில் கொங்குநாட்டின் வருங்கால முதல்வரே என்ற வாசகம் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டை பிரித்து கொங்குநாட்டை உருவாக்க வேண்டும் என சிலர் குரல் எழுப்பி வரும் நிலையில், அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனரில் கொங்குநாட்டின் வருங்கால முதல்வரே என்ற வாசகம் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com