வேதாரண்யம் கடல் சீற்றம்: மீன்பிடி தொழில் பாதிப்பு

வேதாரண்யம் கடல் சீற்றம்: மீன்பிடி தொழில் பாதிப்பு
வேதாரண்யம் கடல் சீற்றம்: மீன்பிடி தொழில் பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமலிருக்கின்றனர். வெப்பச்சலனம் காரணமாக வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் ஆகிய கடலோர கிராமங்களில் பைபர் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் சுமார் 2000 மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் உள்ளனர்.

கடற்கரையில் உள்ள படகுகள் ஒன்றோடு ஒன்று மோதாமல் இருப்பதற்காக 400 படகுகளை மேட்டுப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com