கம்யூனிஸ்ட் வேட்பாளர் கன்னையா குமாருக்கு குவியும் நன்கொடை!

கம்யூனிஸ்ட் வேட்பாளர் கன்னையா குமாருக்கு குவியும் நன்கொடை!
கம்யூனிஸ்ட் வேட்பாளர் கன்னையா குமாருக்கு குவியும் நன்கொடை!

மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் கன்னையா குமாருக்கு நன்கொடைகளை பொதுமக்கள் தாராளமாக வழங்கி வருகின் றனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவரான கன்னையா குமார், பீகாரின் பெகுசராய் தொகுயில், ‌இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அங்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள் ளார். இந்தத் தொகுதியில் கன்னையா குமாருக்கு ஆதரவு பெருகி வருகிறது. 

பாஜகவின் அடக்குமுறையையும், பிரிவினைவாதத்தையும் கடுமையாக எதிர்த்த கன்னையா குமாருக்கு ஆதரவு தாருங்கள் என ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ச் என்ற அமைப்பை நடத்தி வரும் குஜராத் எம்எல்ஏ, ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் பரப்புரை மேற்கொண் டார். 

கன்னையா குமார் பரப்புரை மேற்கொள்ளும் பகுதியில் இருந்த மக்கள் 20 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டி வழங்கியுள்ளனர். அவருக்கு தேர்தல் செலவுக்காக, ஆன்லைன் மூலமும் பணம் திரட்டப்பட்டு வருகிறது. சிபிஐ தலைவர் ஒருவர் கூறும்போது, ‘’மக்கள் பல பகுதிகளில் இருந்து அழைத்து நன்கொடை கொடுத்துவருகின்றனர். அவர்களின் ஆர்வம் ஆச்சரியப்படுத்துகிறது’ என்றார்.

இந்நிலையில் கன்னையா குமார் தனது முகப்புத்தகத்தில், ‘’ஒரு பக்கம் ஆதரவு பெருகிறது. மறுபக்கம் பெரும் சதி நடக்கிறது. பிரசாரத்துக்காக வும் ஆன்லைனில் நன்கொடை திரட்டவும் தொடங்கப்பட்ட இணையதளத்தை சிலர் ஹேக் செய்துவிட்டனர்’ என்று தெரிவித்துள்ளார். அதைச் சரி செய்யும் வேலை நடந்து வருகிறது. 

இந்நிலையில் அவரை ஆதரித்து மூத்த இந்திப் பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான சபானா ஆஸ்மி ஆகியோர் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com