UPSC தேர்வர்களுக்கான வயது வரம்பு தளர்வு பரிந்துரை முதல் விண்ணப்ப படிவம் பற்றிய விவரம் வரை!

UPSC தேர்வர்களுக்கான வயது வரம்பு தளர்வு பரிந்துரை முதல் விண்ணப்ப படிவம் பற்றிய விவரம் வரை!
UPSC தேர்வர்களுக்கான வயது வரம்பு தளர்வு பரிந்துரை முதல் விண்ணப்ப படிவம் பற்றிய விவரம் வரை!

கொரோனா காலத்தில் குடிமைப் பணி தேர்வுகளை எழுத இயலாத தேர்வர்களுக்கு வயது வரம்பை தளர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-  “குடிமைப் பணித் தேர்வுகள் உட்பட, மத்திய அரசால் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வுகளுக்கான வயது வரம்பை, கொரோனா பெருந்தொற்று காலங்களில் தவறவிட்ட தேர்வர்கள், ஒருமுறை நடவடிக்கையாக, தங்களின் வயது வரம்பை நீட்டிக்க கோரி உள்ளனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். அனைத்து தேர்வர்களுக்கும் வயது தளர்வுடன், கூடுதல் முயற்சிக்கான வாய்ப்புகளை வழங்கி, பார்லிமென்ட் நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்றமும் அறிவுரைகளை வழங்கி உள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள், தேர்வர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தேர்வர்களுக்கு ஒரு முறை தளர்வு வழங்குவதால், அரசுக்கு எவ்வித நிதிச்சுமையும் ஏற்படாது. இது குடிமைப் பணி சேவையில் சேர விரும்பும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, பெரிய வாய்ப்பை வழங்கும். எனவே, கொரோனா பாதிப்பை கருத்தில் வைத்து, குடிமைப் பணித் தேர்வர்களுக்கு, கூடுதல் வாய்ப்பு வழங்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



UPSC தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? இணைக்கப்பட வேண்டியவை எவை?

2023-ம் ஆண்டுக்கான `யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் UPSC IAS 2023’ தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் சில தினங்களுக்கு முன்னர்தான் வெளியாகியிருந்தது. இந்த தேர்வு குறித்த விவரங்களான தகுதி, தேர்வு முறை, காலியிடங்கள், பாடத்திட்டம், தேர்வு தொடர்பான விதிகள், விருப்பப் பாடங்களின் பட்டியல் என அனைத்து விவரங்களும் அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த தேர்வுக்குத் தயாராகும் அனைத்து மாணவர்களும் UPSC அதிகாரப்பூர்வ இணையதளம் upsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 21. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பது தொடர்பாக UPSC பல அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய விவரங்கள் இதோ...

UPSC தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

* UPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் (upsconline.nic.in) செல்லவும்.

* தேர்வு அறிவிப்பு குறித்த விவரத்தை கிளிக் செய்யவும்.

* பின்னர், ஆன்லைன் லிங்கை கிளிக் செய்து, விண்ணப்பிக்கவும்.

* சிவில் சர்வீசஸ் பகுதி-I பதிவில் கிடைக்கும் இணைப்பைத் தேடி, அதைக் கிளிக் செய்யவும்.

* விண்ணப்பப் படிவ வழிமுறைகளை கவனமாகப் பார்த்து, ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.

* தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்தவுடன் ’தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, பின்னர் ’சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும்.

இணைக்கப்பட வேண்டியவை எவை?

* யுபிஎஸ்சி குறிப்பிட்டுள்ளபடி ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பம்.

* செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை சான்று மற்றும் விவரங்கள்.

* உங்களுடைய கல்வி மற்றும் தனிப்பட்ட விவரங்கள்

* ஆன்லைன் கட்டண விவரங்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com