மணமக்களுக்கு தலைக்கவசங்களை பரிசளித்த நண்பர்கள்

மணமக்களுக்கு தலைக்கவசங்களை பரிசளித்த நண்பர்கள்
மணமக்களுக்கு தலைக்கவசங்களை பரிசளித்த நண்பர்கள்

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு தலைக்கவசம் பரிசாக ‌‌வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் இருச்சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் தலைகவசம் அணியவேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சென்னை ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மோகன்/விசாலி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மணமக்களுக்கு விதவிதமான பல்வேறு பரிசுகளை வழங்கினர். 

அப்போது மணமக்களின் நண்பர்கள் சிலர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இரண்டு ஹெல்மட்டை பரிசாக வழங்கியதோடு, அவர்கள் இருவரையும் அணிய செய்தனர். பின்னர் இருவரும் ஹெல்மெட் அணிந்து கொண்டு புகைப்படத்திற்கு நண்பர்களுடன் போஸ் கொடுத்தனர். இதனை திருமண விழாவிற்கு வந்த உறவினர்கள் புதுமையுடன் பார்த்தனர். இந்த பரிசு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com