நண்பர்கள் தினம்: அனைவரின் பாராட்டையும் பெற்ற போக்குவரத்து காவல் துறையினரின் செயல்

நண்பர்கள் தினம்: அனைவரின் பாராட்டையும் பெற்ற போக்குவரத்து காவல் துறையினரின் செயல்
நண்பர்கள் தினம்: அனைவரின் பாராட்டையும் பெற்ற போக்குவரத்து காவல் துறையினரின் செயல்

நண்பர்கள் தினத்தையொட்டி வாகன ஓட்டிகளுக்கு தேசியக் கொடிகளை வழங்கி நட்புறவு பாராட்டிய மதுரை போக்குவரத்து காவல் துறையினரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நண்பர்கள் தினத்தை போற்றும் விதமாக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் மதுரை கீழவாசல் மற்றும் பெரியார் நோக்கி சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளை நிறுத்தினர்.

பின்னர் பொதுமக்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துகள் கூறியதோடு தேசியக் கொடிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி நண்பர்கள் தினத்தை கொண்டாடினர், காவல்துறை உங்கள் நண்பன், சாலை விதிகளை மதிப்போம், தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டுங்கள் உள்ளிட்ட அறிவுரைகளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி வாகன ஓட்டிகளுக்கு கூறினார்.

இதைத் தொடர்ந்து தேசியக் கொடிகளை வழங்கி நண்பர்கள் தின வாழ்த்தை வித்தியாசமான முறையில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவித்தார். போக்குவரத்து காவல் துறையினரின் இந்த செயல் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com