மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை, எந்தச் சூழ்நிலையிலும் ரத்து செய்ய மாட்டோம் என மின்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், ’விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தையும் அரசு தொடர்ந்து வழங்கும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு செயல்படவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறார். அரசு சுணக்கமின்றி செயல்படுகிறது’ என அவர் கூறினார்.