தமிழகத்தில் மேலும் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தென்னக ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தென்னக ரயில்வே அறிவிப்பு
தமிழகத்தில் மேலும் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தென்னக ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் ஏற்கனவே 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.


கொரோனா ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. அதன்படி செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரையிலும் வாரத்திற்கு மூன்று முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

அதேபோல செப்டம்பர் 8ம் தேதி முதல் சென்னை - கன்னியாகுமரி இடையேயும் செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலும். செப்டம்பர் 7ம் தேதி முதல் திருச்சி - நாகர்கோவில் மார்க்கத்திலும் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com