அவைக்கு வராத 4 அமைச்சர்கள்: ஸ்டாலின் தகவல்

அவைக்கு வராத 4 அமைச்சர்கள்: ஸ்டாலின் தகவல்
அவைக்கு வராத 4 அமைச்சர்கள்: ஸ்டாலின் தகவல்

தமிழக பட்ஜெட் தாக்கலின்போது 4 அமைச்சர்கள் பேரவைக்கு வரவில்லை என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

2017-18ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டான இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட் நிகழ்வுகளின் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், புதிய மொந்தையில், பழைய கள் என்று பட்ஜெட் குறித்து விமர்சித்தார். பட்ஜெட் தாக்கலின்போது 4 அமைச்சர்கள் அவைக்கு வரவில்லை என்று கூறிய ஸ்டாலின், அவர்கள் எங்கே; சசிகலாவைப் பார்க்க பெங்களூரு சிறைக்கு சென்றார்களா என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com