போதை மறுவாழ்வு மைய ஊழியர்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு? - 4 பேருக்கு சிறை!

நாகையில் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையத்தில் ஊழியர்கள் தாக்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டவர்கள்
சிறையில் அடைக்கப்பட்டவர்கள்PT Desk

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த நான்கு பேர் தப்பிச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது. அப்போது, அவர்களை பிடித்த ஊழியர்கள், பைப்பால் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முருகேசன் என்பவர் உயிரிழந்தார். மூன்று பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையம்
குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையம்PT Desk

இதையடுத்து, மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மறுவாழ்வு மைய நிர்வாகி மணிகண்டன் உட்பட 4 பேர் மீது கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்தனர். பின்னர் வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும், வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com