2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருச்சி பொதுத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக அவருடைய உடல் சொந்த ஊரான மதுராந்தகம் அருகே உள்ள இரும்பேடு கிராமத்தில் எளிய முறையில் இன்று மாலை 4 மணிக்கு அவரது வீட்டின் அருகில் உள்ள அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தலித் எழில்மலையின் இறப்புக்கு திமுக எம்பி கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டரில், “மத்திய சுகாதாரத்துறை முன்னாள் இணை அமைச்சர் தலித் எழில்மலை அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையுற்றேன். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளில் பற்று கொண்டவர், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு குரல் கொடுத்தவர். அவரது மறைவு, நிச்சயம் ஒரு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்” என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.