தலைசிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்

தலைசிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்
தலைசிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்

ஒரு தலைசிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்காக அஞ்சலி செலுத்தும் லட்சக்கணக்கான அவரது பிரியர்களில் நானும் ஒருவன். நாடு ஒரு தலைசிறந்த தலைவரை, தலைமையை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 

ஸ்டாலின் முகநூலில், “முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பெரிதும் வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரை இழந்து வாடும் அவரது உறவினர்களுக்கும், அவர்மீது அன்பும் மரியாதையும் கொண்டிருக்கும் பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தலைவர் கலைஞர் அவர்களுடன் அன்பும் நட்பும் பாராட்டிய தலைவர்” என தெரிவித்துள்ளார். வாஜ்பாய் உடலக்கு அஞ்சலி செலுத்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் எம்.பி கனிமொழி நாளை டெல்லி செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com