ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருக்கு கடந்த தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பு அளிக்கவில்லை. எனினும் அத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். இதனிடையே மேற்கு மண்டலத்தில் இருந்து மாற்றுக் கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தோப்பு வெங்கடாசலம் அடுத்த 3 நாட்களில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.