“கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி”- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

“கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி”- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
“கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி”- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
"கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி, தேவையென்றால் போட்டுக்கொள்வோம், தேவையில்லை என்றால் கழட்டி வைத்து கொள்வோம்" என்றும், பாமக தனித்து போட்டியிடுவதில் எந்தவொரு வருத்தமுமில்லை என்றும் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளையோட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அண்ணாவின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார். 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "முதல்வர் ஸ்டாலின், தேர்தலின்போது சொன்னது போல நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யாததற்கு திமுக தலைமையிலான தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஆட்சியிலும் சட்ட மசோதா கொண்டு வந்தோம். திமுக கொண்டு வந்துள்ள நீட் தேர்வு சட்ட மசோதாவை திமுக எப்படி செயல்படுத்த போகிறது என்பதை நாம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி, துண்டை தேவையென்றால் தோலில் போட்டு கொள்ளலாம். தேவையில்லை என்றால் கழட்டி வைத்து கொள்ளலாம். அந்தவகையில் அதிமுக எந்தவொரு காலகட்டத்திலும் கூட்டணியை நம்பி இருந்ததில்லை. ஆட்சியின்போது செயல்படுத்திய திட்டங்கள், தொண்டர்களை நம்பியே அதிமுக உள்ளது. கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தான் எடுபடும்.
உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்துதான் அமையும். எனவே பாமக தனித்து போட்டியிடுவதால் வருத்தம் இல்லை" என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com