சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் வீட்டிற்குள் புகுந்த கருநாகப்பாம்பு - அதிர்ச்சியடைந்த மக்கள்

சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் வீட்டிற்குள் புகுந்த கருநாகப்பாம்பு - அதிர்ச்சியடைந்த மக்கள்
சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் வீட்டிற்குள் புகுந்த கருநாகப்பாம்பு - அதிர்ச்சியடைந்த மக்கள்

சத்தியமங்கலத்தில் வீட்டிற்குள் புகுந்த கருநாகப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் உள்ள ரங்கசமுத்திரம் எக்ஸ்டென்ஷன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் கருநாகபாம்பு புகுந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பதட்டமடைந்து உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் அரைமணி நேரம் போராடி கரு நாகப்பாம்பை பிடித்து சாக்குப் பையில் அடைத்தனர். பின்னர் பாம்பினை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். நகர்ப் பகுதியில் வீட்டில் நுழைந்த கரு நாகப் பாம்பை வனத்துறையினர் பிடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com