நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் உள்ளது தெப்பக்காடு கிராமம். இங்கு பழங்குடியின மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி இங்குள்ள யானைப்பாடி பகுதியைச் சேர்ந்த மாரி என்ற பெண்ணை புலி கொன்று தின்றது. அப்போது முதல் வனத்துறையினர் தானியங்கி கேமராக்களை பொருத்தியும், ரோந்து சென்றும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். குறிப்பிட்ட அந்த பகுதியில் நான்கு புலிகள் நடமாடி வருவதால், பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான புலியை கண்டறிவதில் வனத்துறையினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஊர் மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.