தமிழகத்தில் விவசாயம் செய்யும் வெளிநாட்டு பெண்கள்

தமிழகத்தில் விவசாயம் செய்யும் வெளிநாட்டு பெண்கள்
தமிழகத்தில் விவசாயம் செய்யும் வெளிநாட்டு பெண்கள்

உலகம் மெச்சும் பழமையும், பெருமையும், கலாசார செழுமையும் கொண்டது தமிழர் பாரம்பரியம். பன்னெடுங்காலமாக பண்பட்ட விவசாயத்தை மேற்கொண்ட உயர்சமூகமான தமிழர்களின் கலாசாரத்தாலும், விவசாய முறைகளாலும் ஈர்க்கப்பட்ட இரண்டு வெளிநாட்டு இளம்பெண்கள், திருவள்ளுர் அருகே வேளாண்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்காட்லாந்து நாட்டைச்சேர்ந்த ஹன்னா ராஸ். பள்ளிப்படிப்பை முடித்து ஓராண்டு விடுமுறையை கழிக்க இந்தியா வந்த இந்த பெண்ணும், க்ளோவி எலிசபெத் என்ற இங்கிலாந்து நாட்டு பெண்ணும் திருவள்ளுர் மாவட்டம் திருநின்றவூரை அடுத்துள்ள கசுவா என்ற கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள்.நெற்றியில் பொட்டு வைத்து, காலில் கொலுசு அணிந்து, எளிய புடவை அணிந்து  தமிழ்பெண்கள் போன்றே மாறியுள்ளனர். தோற்றத்திலும் செயலிலும் முழுமையான தமிழ் பெண்களாகவே இவர்கள் மாறிவிட்டனர். வயலில் விளைந்துள்ள காய்கறிகளை பறிப்பது, மாடுகளுக்கு வைக்கோலிடுவது, அவற்றை பராமரிப்பது போண்ற பணிகளையும் மேற்கொள்கின்றனர். 


சேவாலயம் என்ற அமைப்பின் மூலம் இங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டு பெண்கள் இருவரும் மாணவர்களுக்கு பாடம் கற்று தருகிறார்கள்.வரும் ஆகஸ்ட் மாதத்தில் சொந்த நாடு திரும்பும் இந்த இரு பெண்களும், அங்கு செல்வதற்குள் தமிழ் மொழியை கற்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ் கலாசாரத்தால் கவரப்பட்ட தங்களுக்கு உழவுப்பணி ஆத்ம திருப்தியளிப்பதாகவும் கூறுகின்றனர்.

ஸ்காட்லாந்து நாட்டைச்சேர்ந்த ஹன்னா ராஸ் பேசுகையில், “இந்த மாணவர்கள் வகுப்பறையில் மிகுந்த ஆர்வத்துடன் பாடம் கற்றுக்கொள்கிறார்கள். இங்கு இயற்கை முறை வேளாண்மை மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மை மிகவும் அற்புதமானதாக இருக்கிறது. பூச்சி மருந்துகள் கிடையாது. தீமை விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை. மிகவும் ஆரோக்கியமாக விஷயமாக இருக்கிறது.இந்திய கலாசாரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதிலும் தமிழ் கலாசாரத்தை கற்றுக்கொள்ளவும், விரும்பவும், பின்பற்றவும் ஆரம்பித்துவிட்டேன். நான் சொந்த நாடு திரும்பினாலும் அங்கும் இங்கு கற்றுக்கொண்ட நல்ல பாடங்களை பின்பற்றுவேன் என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com