செனாய் நகர் அருகே பின்னங்காலில் முறிவு ஏற்பட்ட நிலையில் காளை மாடு ஒன்று சுற்றித்திரிவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதற்கு சிகிச்சை அளிக்க ஆட்சியர் உத்தரவிட்டதன்பேரில், காளை மாட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து தல்லாகுளம் கால்நடை முதன்மை மருத்துவர் வைரசாமி தலைமையிலான குழுவினர் அந்த காளை மாட்டிற்கு செயற்கைக் காலை பொருத்தினர். சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.