கொரோனா பீதியால் பொதுமக்கள் கொடுத்த அழுத்தம் - வாய்பேச முடியாத தொழிலாளி தற்கொலை

கொரோனா பீதியால் பொதுமக்கள் கொடுத்த அழுத்தம் - வாய்பேச முடியாத தொழிலாளி தற்கொலை
கொரோனா பீதியால் பொதுமக்கள் கொடுத்த அழுத்தம் - வாய்பேச முடியாத தொழிலாளி தற்கொலை

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பீதியால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

காட்பாடி ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஹரிபாபு (50). இவர் வாய்பேச முடியாதவர் என்று சொல்லப்படுகிறது. ஹரி அப்பகுதியில் மாவு அரைக்கும் தொழில் செய்து வரும் நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு சித்தூர் சென்று வந்ததாக தெரிகிறது. இதனை கேள்விபட்ட அப்பகுதி மக்கள் அவரை 14 நாட்கள் தனிமையில் இருக்க அங்குள்ள பொது மக்கள் கூறியதாகவும் அவரிடம் யாரும் மாவு அரைக்க வேண்டாம் எனக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

 இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஹரிபாபு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சம்பவ  இடத்திற்கு வந்த காட்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com