கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. வெள்ள அபாய எச்சரிக்கை..

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. வெள்ள அபாய எச்சரிக்கை..
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. வெள்ள அபாய எச்சரிக்கை..

கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரா எல்லையோரப்பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கம் நிரம்பும் நிலையிலுள்ளது. முன்னெச்சரிக்கையாக, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 950 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் ஆங்காங்கே இருந்த தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், கிராமங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்களில் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com