குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு! காண குவிந்த சுற்றுலா பயணிகள்!

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை காண சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு
குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்குPT Desk

தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரக்கூடிய மழை காரணமாக பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பேரருவியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனையடுத்து காவல் துறையினர் அருவிக்கு அருகே சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com