பொய் வழக்குப் போடுவதா? மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பொய் வழக்குப் போடுவதா? மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
பொய் வழக்குப் போடுவதா? மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் போதைப் பொருள் கடத்துவதாகக் கூறி பொய்வழக்கு பதியும் இலங்கைக் கடற்படையைக் கண்டித்து ,காரைக்காலில் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.

கடந்த 1ஆம் தேதி காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அடிக்கடி நடக்கும் இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காரைக்கால் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு அந்தப் பகுதியில் உள்ள 11 மீனவ கிராமத்தினர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது.

நாகை மீனவர்களோடு மதியம் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com