மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Published on

காற்றழுத்த தாழ்வு காரணமாக பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “இலங்கை குமரிக்கடல் மாலத்தீவு பகுதிகளுக்கு அருகே வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அது, 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மன்டலாமக மாறும். இதனால் குமரிக்கடல் தெற்கு கேரளா பகுதியில் பலத்த காற்று வீசும். 40 முதல் 50 கிமீ வரை காற்று வீசும்.  சில நேரம் 60 கிமீ வேகத்தில் வீசலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “பலத்த காற்று வீசும் என்பதால் அடுத்த வரும் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். லட்சத்தீவு நோக்கி காற்றழுத்த தாழ்வு நகர்வதால் லட்சத்தீவு பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை செல்ல வேண்டாம். மார்ச் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

அரபிக் கடலில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 156 படகில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு வருகிறோம், மேலும் சிலர் அவர்கள் கரைக்கு திரும்பி வருகிறார்கள். இவர்களை கரைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைக்கு கடலோர காவல்படை மற்றும் விமான படை தகவல் கொடுக்கப்பட்டுள்து. 13, 14, 15 ஆகிய நாட்களில் கேரள கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்பதால் மீனவர்கள் அந்த கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com