கொரோனா முடிவு வருவதற்குள் உடலை அனுப்பிய மருத்துவமனை: துக்க நிகழ்வில் பங்கேற்றவர்கள் அச்சம்

கொரோனா முடிவு வருவதற்குள் உடலை அனுப்பிய மருத்துவமனை: துக்க நிகழ்வில் பங்கேற்றவர்கள் அச்சம்
கொரோனா முடிவு வருவதற்குள் உடலை அனுப்பிய மருத்துவமனை: துக்க நிகழ்வில் பங்கேற்றவர்கள் அச்சம்

கொரோனா பாதிப்பால் நாகை மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த குத்தாலம் தாலுகா மேல சாலையை சேர்ந்த 62 வயது முதியவர் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் திருவாரூர் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று மாலை நெஞ்சுவலி வந்து முதியவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், ஏற்கெனவே எடுத்துக்கொண்ட பரிசோதனை முடிவு வெளிவந்ததில், அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் இரவோடு இரவாக முதியவரின் வீட்டுக்குச் சென்று அவரது உடலை கைப்பற்றி பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நள்ளிரவில் அடக்கம் செய்தனர்.

இதையடுத்து அவரது வீடு உள்ள பகுதி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் துக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக முதியவர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com