முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறுகிறது.
முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கொரோனா நிவாரணமாக ரேஷன் கடைகள் மூலம் முதற்கட்டமாக 2ஆயிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது பற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் தடுப்புக்கு இரண்டு வாரங்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை செயல்படுத்துவது மற்றும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது