பாத்ரூமுக்குள் பதுங்கிய கொடிய விஷப்பாம்பு - நீண்ட நேரம் போராடிய தீயணைப்பு துறையினர்!

பாத்ரூமுக்குள் பதுங்கிய கொடிய விஷப்பாம்பு - நீண்ட நேரம் போராடிய தீயணைப்பு துறையினர்!
பாத்ரூமுக்குள் பதுங்கிய கொடிய விஷப்பாம்பு - நீண்ட நேரம் போராடிய தீயணைப்பு துறையினர்!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பாத்ரூமுக்குள் பதுங்கிய விஷப்பாம்பை தீயணைப்புத் துறையினர் போராடி பிடித்து காப்புக்காட்டில் விட்ட நிகழ்வு மக்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பெரிய பள்ளிவாசல் அருகே பீர்முகமது என்பவரின் வீட்டின் குளியல் அறைக்குள் புகுந்த கொடிய விஷப்பாம்பு ஒன்று உள்ளே குளிக்க சென்றவரை அச்சுறுத்தியுள்ளது. இதனையடுத்து விஷப்பாம்பு குறித்த தகவலை தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதியினர் தெரிவித்தனர். நிகழ்விடம் வந்த தீயணைப்புத் துறையினர், குளியலறைக்குள் பதுங்கிக்கொண்டு போக்கு காட்டிய சுமார் 7 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் வகை பாம்பை பிடித்து பிளாஸ்டிக் கேனில் அடைத்து அப்பகுதியில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர்.

குளியல் அறைக்குள் புகுந்த பாம்பு பிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியினர் நிம்மதியடைந்தனர். தீயணைப்புத் துறையினரின் இந்த துரித செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com