சாத்தூர்: பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சாத்தூர்: பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
சாத்தூர்:  பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

விபத்து குறித்து முதல்வர் வெளியிட்ட ஆணையில் கூறியதாவது, “பட்டாசு ஆலை விபத்து பகுதியில் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும் வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்”  என்றார் 

முன்னதாக, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். வழக்கம் போல் இன்று பணியில் தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த போது, திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கு பட்டாசுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வே காரணம் எனச் சொல்லப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com