பழனியை கொடைக்கானல் சாலையில் 8 அடி நீளமுள்ள மலை பாம்பை தீயணைப்பு துறையின் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பழனி கொடைக்கானல் சாலையில் வசித்துவருபவர் திருமலை. இவரது தோட்டத்து கிணற்றில் 8 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று இருந்துள்ளது. கிணற்றில் மலை பாம்பு இருப்பதை கண்டு அலறிய திருமலை, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் மலை பாம்பை காண அப்பகுதி மக்கள் குவிந்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பாம்பு பிடிக்கும் கருவிகளுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மலை பாம்பை பாதுகாப்பாக பிடித்து சாக்குபையில் அடைத்தனர். பிடிப்பட்ட மலை பாம்பை பழனி வனத்துறையினரிடம் தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து மலைப்பாம்பு பழனி-கொடைக்கானல் சாலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரமாகவிடப்பட்டது. பிடிபட்ட மலை பாம்பு எட்டு அடி நீளம், இருக்கும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.