நெசவாளர் சங்கத்தில் தீ விபத்து:இலவச வேஷ்டி சேலைகள் தீயில் எரிந்து நாசம்

நெசவாளர் சங்கத்தில் தீ விபத்து:இலவச வேஷ்டி சேலைகள் தீயில் எரிந்து நாசம்
நெசவாளர் சங்கத்தில் தீ விபத்து:இலவச வேஷ்டி சேலைகள் தீயில் எரிந்து நாசம்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் நெசவாளர் சங்கத்தில் ஏற்பட்ட தீ‌‌ விபத்தால் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட இருந்த இலவச வேஷ்டி - சேலைகள் எரிந்து நாசமாகின.

வரும் பொங்கல் பண்டிகைக்காக பல லட்சம் மதிப்பிலான வேஷ்டி - சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர் சங்கத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை நெசவாளர் சங்கத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு வழங்க இருந்த இலவச வேஷ்டி - சேலைகள் முற்றிலுமாக தீயில் எரிந்து கருகின. இதனுடன் நெசவாளர்களின் முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியதாக நெசவாளர்கள் தெரிவித்தனர்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com