பனகல் பார்க் பெட்ரோல் பங்கில் தீவிபத்து : நடந்தது என்ன?

பனகல் பார்க் பெட்ரோல் பங்கில் தீவிபத்து : நடந்தது என்ன?

பனகல் பார்க் பெட்ரோல் பங்கில் தீவிபத்து : நடந்தது என்ன?
Published on

சென்னை தி.நகர் பனகல் பார்க்கில் இருக்கக் கூடிய சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சேமிப்பு டாங்கை மண்ணில் புதைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை பனகல் பார்க் உள்ள சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த பழைய பெட்ரோல் டாங்கை மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது வேறு பங்கிலிருந்து பெட்ரோலை கொண்டு வந்து டாங்கில் நிரப்பும்போது திடீரென பெட்ரோல் எறிய தொடங்கியுள்ளது. இதில் 3 பேர் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில் அவர்கள் திருவான்மியூரைச் சேர்ந்த குமார்(45) ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த சேகர்(35) மற்றும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஒருவருக்கு தீ காயம் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பாண்டி பஜாரில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com