மக்களின் தேவையை அறிந்து அதிமுக அரசு செயல்படுகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

மக்களின் தேவையை அறிந்து அதிமுக அரசு செயல்படுகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

மக்களின் தேவையை அறிந்து அதிமுக அரசு செயல்படுகிறது - அமைச்சர் ஜெயக்குமார்
Published on

மக்களின் தேவையை அறிந்து அதிமுக அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களி சந்தித்த நிதி அமைச்சர் ஜெயக்குமார், மழையே பெய்யாமல் வறட்சி தலைவிரித்தாடுகிறது,
வெறும் 40 சதவீதம் மழையே பெய்துள்ளது இந்நிலையிலும், மக்களுக்கு இடையூறின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும்,
படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதனால் மக்கள் சட்டத்தை கையிலெடுக்க வேண்டாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார்
அறிவுறுத்தினார்.

பதவியேற்ற 100 நாட்களில் வறட்சியை சமாளித்துள்ளதாகவும், குடிநீர் திட்டங்களுக்காக ரூ.1640 கோடியும், குடிநீர் மராமத்து
பணிகளுக்காக ரூ.300 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், மக்களின் தேவையை அறிந்து அதிமுக அரசு செயல்பட்டு
வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com