நடுக்கடலில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட தமிழக மீனவர்கள்

நடுக்கடலில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட தமிழக மீனவர்கள்

நடுக்கடலில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட தமிழக மீனவர்கள்
Published on

தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் நடுக்கடலில் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த 120 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி நாகை-வேதாரண்யம் இடையே மீன்பிடித்ததாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக 20 பைபர் படகுகளில் சென்ற வெள்ளப்பள்ளம் மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தியது குறித்து கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் முற்றியது. உடனே படகுகளில் இருந்த கற்கள், பாட்டில்கள் போன்றவற்றால் ஒருவரையொருவர் சராமாரியாக தாக்கிக் கொண்டனர்.சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடுக்கடலில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில், இரு மீனவ கிராமங்களை சேர்ந்த 17 பேர் காயமடைந்தனர். நடுக்கடலில் மீனவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் இரு கிராமங்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கீச்சாங்குப்பம் மீனவர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து வெள்ளப்பள்ளத்தில் மீனவர்கள் சாலை மறியல் செய்தனர். சம்ப‌ந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com