“நல்ல மார்க் வாங்கியும் எங்களை யாரும் அழைக்கல” – விஜய் விழாவில் கலந்து கொள்ளமுடியாத மாணவர்கள் #Video

“நாங்களும் நல்ல மதிப்பெண் எடுத்திருக்கோம், ஆனா எங்களை யாரும் அழைக்கவில்லை” என விஜய் மக்கள் இயக்கம் விருது வழங்கும் விழாவில் மாணவர்கள் சிலர் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று சென்னை நீலாங்கரையில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதை நடிகர் விஜய் வழங்கி, அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். மாணவர்களும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

vijay
vijaypt desk

விழாவில் மாணவ, மாணவிகளை மேடைக்கு அழைத்து சான்றிதழ்களையும் ஊக்கத் தொகையையும் வழங்கினார் விஜய். இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் ‘அதிக மதிப்பெண்கள் பெற்றும் எங்களை அழைக்கவில்லை’ என சில மாணவர்கள் கண்ணீரோடு வந்து கேள்வி எழுப்பினர்.

அதில் ஒரு மாணவி, “நான் 600க்கு 597 மதிப்பெண் பெற்றிருக்கிறேன், ஆனாலும் என்னை அழைக்கவில்லை” என கண்ணீரோடு கூறினார்.

இந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் வேதாரண்யத்தை சேர்ந்த மற்றொரு மாணவியும் இதேபோன்றொரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் 500-க்கு 496 மதிப்பெண் பெற்றிருந்தேன் எனக்கூறி தன்னை அழைக்கவில்லை என கூறியிருந்தார். இது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

நேற்றைய தினம் கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், இப்படி சில மாணவ மாணவியரின் பெயர் விட்டுப்போயிருப்பது, தற்போது பேசுபொருளாகியுள்ளது. இவர்களின் வீடியோவை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com