‘தொப்புள் கொடி கூட அகற்றப்படவில்லை’- முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு... போலீஸ் விசாரணை

‘தொப்புள் கொடி கூட அகற்றப்படவில்லை’- முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு... போலீஸ் விசாரணை
‘தொப்புள் கொடி கூட அகற்றப்படவில்லை’- முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு... போலீஸ் விசாரணை

பிறந்து சில மணி நேரங்களிலேயே தொப்புள் கொடி அகற்றாமல் முட்புதரில் பெண் சிசு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த புல்லூர் கிராமத்தின் மயான பாதை செல்லும் வழியில், மதுரை வீரன் கோயில் அருகே உள்ள முட்புதரில் பிறந்து சில மணி நேரமேயான பெண் சிசுவை, தொப்புள் கொடி அறுக்காமல் யாரோ வீசி சென்றுவிட்டனர்.

இந்நிலையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு அப்பகுதியில் விவசாய வேலைக்கு சென்ற விவசாயி கூலித் தொழிலாளிகள், குழந்தையை மீட்டு குழந்தையை சுத்தம் செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அந்தக் குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசு பராமரிப்பு பிரிவில் சிகிச்சைக்காக அந்தக் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேப்பூர் காவல் துறையினர் குழந்தையை முட்தரில் வீசி சென்றவர்கள் யார்? எதற்காக குழந்தையை முள்புதரில் வீசி சென்றார்கள் ? யாருடைய குழந்தை? என பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com