மகன்களுடன் தற்கொலை செய்த தந்தை: ‘தகாத உறவு’ பெண்ணின் டார்ச்சர்.. திடுக்கிடும் உண்மைகள்..!

மகன்களுடன் தற்கொலை செய்த தந்தை: ‘தகாத உறவு’ பெண்ணின் டார்ச்சர்.. திடுக்கிடும் உண்மைகள்..!
மகன்களுடன் தற்கொலை செய்த தந்தை: ‘தகாத உறவு’ பெண்ணின் டார்ச்சர்.. திடுக்கிடும் உண்மைகள்..!

மதுரையில் மனைவி இறந்ததால் மகன்களுடன் தந்தை தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அரியூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுந்தர். இவரது மனைவி இந்துமதி கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. சில தினங்களுக்கு முன்பு சுந்தர் தனது இரண்டு மகன்களான சுனில் (13) மற்றும் விமல் (9) ஆகியோருடன் தற்கொலை செய்துகொண்டார். மனைவி இறந்த சோகத்தில் மகன்களுடன் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. மூன்று பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பின்னர் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், சுந்தரின் செல்போனில் பதிவாகியிருந்த வீடியோ ஒன்றின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தற்கொலை செய்துகொண்ட அன்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த சுந்தர், தனது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை அவரே கூறி வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். மனைவி இறந்த பின்னர் லட்சுமி என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும், அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து வாழ்ந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், லட்சுமி தனது மகன்களை கொடுமை செய்ததுடன், தன்னை பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு லட்சுமி தன்னுடன் சண்டை போட்டுக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார். அத்துடன் தனது மகன்களிடம், ‘அம்மாவிடம் சென்றுவிடலாம். அவர் இனிமேல் நம்மை பார்த்துக்கொள்வார்’ என்றும் தெரிவித்திருக்கிறார். மதுபோதையில் இருக்கும் அவர், தான் வாங்கிவந்த வாழைப்பழத்தில் நச்சுத்தன்மை கொண்ட பொருளை கலந்து மகன்களுக்கு கொடுக்க முயற்சிக்கிறார். அப்போது மூத்த மகன் சுனில் அதை சாப்பிட மறுக்கவே, தந்தையும், இளைய மகனும் சேர்ந்து அவரை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்துள்ளனர்.

இறப்பதற்கு முன்பாக விவரம் அறியாத இளைய மகன் விமல், ‘நான் இறந்தாலும் பேயாக வந்து உன்னை பழி வாங்குவேன்’ என கூறுவது காண்போரை கலங்கச் செய்கிறது. சினிமாவை பார்த்து அந்த சிறுவன் இவ்வாறு விவரம் தெரியாமல் பேசியுள்ளார் என காண்போரை நினைக்க வைக்கவும் செய்கிறது. இறப்பதற்கு முன்பு பேசியுள்ள சுந்தர், தனது மகன்கள் கொடுமை செய்யப்பட்டதையும், தன் மனைவி உள்ளிட்ட 4 பேரின் இறப்பிற்கும் லட்சுமிதான் காரணமென கூறியிருக்கிறார். இதனால் சுந்தரின் மனைவி இந்துமதி இறப்பிலும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, லட்சுமியை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுவரை தற்கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கு, இனி தற்கொலை தூண்டியதாக மாற்றி பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com