குடும்பத் தகராறு... குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை

குடும்பத் தகராறு... குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை
குடும்பத் தகராறு... குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை

திருத்துறைப்பூண்டி அருகே குடும்பத் தகராறில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தந்தை விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை தாலுகா உப்பூர் - ஆலங்காடு கிராமத்தில் வசிப்பவர்கள் கோபாலகிருஷ்ணன் (50) வீரம்மாள் (39) தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி சுமத்ரா தேவி (6) என்ற பெண் குழந்தை உள்ளார். இந்த நிலையில் லோடுமேன் வேலை செய்து வந்த கோபாலகிருஷ்ணன், தினந்தோறும் குடித்துவிட்டு சீட்டாட்டத்திற்கு சென்று வந்ததால் தம்பதியினரிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு தனது குழந்தையுடன் கோபாலகிருஷ்ணன் சீட்டாட சென்றுள்ளார். இதையடுத்து மனைவி வீரம்மாள் குழந்தையை வீட்டில் விட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், தனது மனைவியை அடித்து வீட்டின் வெளியே தள்ளிவிட்டு குழந்தைக்கு வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை கொடுத்து, தானும் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் குழந்தை சுமத்ரா தேவியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோபாலகிருஷ்ணன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com