\
பேருந்தின் பக்கவாட்டில் மோதி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசின் புது ஐடியா!

பேருந்தின் பக்கவாட்டில் மோதி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசின் புது ஐடியா!

பேருந்தின் பக்கவாட்டில் மோதி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசின் புது ஐடியா!
Published on

சென்னை மாநகர பேருந்தின் பக்கவாட்டில் மோதி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, போக்குவரத்துக்கழகம் சார்பில் தடுப்புக் கம்பிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சில நேரங்களில், மாநகரப் பேருந்தின் பக்கவாட்டில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகும்போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க, சென்னை போக்குவரத்துக் கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 3பேருந்துகளின் பக்கவாட்டில், தடுப்புக் கம்பிகளை அமைத்து சோதனை முறையில் இயக்கி வருகின்றனர். படிப்படியாக, மற்ற வழித்தடப் பேருந்துகளிலும் இக்கம்பிகள் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com