விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எலித் தொல்லை: விவசாயிகள் வேதனை

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எலித் தொல்லை: விவசாயிகள் வேதனை

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எலித் தொல்லை: விவசாயிகள் வேதனை
Published on

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எலித் தொல்லை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான நெல், கம்பு, சோளம், உள்ளிட்ட 15 வகையான தானியங்களை விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு எடுத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில் ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள குடோனில் அதிகமான எலித் தொல்லைகள் இருக்கின்றன. எலிகள், தானியங்கள் வைக்கப்பட்டுள்ள சாக்குகளை சேதப்படுத்துவதோடு, அதனுள் இருக்கும் தானியங்களையும் நாசம் செய்து விடுகின்றன.

எனவே எலிகள் தொல்லைகளை கட்டுப்படுத்தி தானியங்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com