விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்

விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்

விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்
Published on

நாளை மறுநாள் நடைபெறவிருந்த விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை இன்று சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பா‌ளர் பி ஆர் பாண்டியன், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளதால், நாளை மறுநாள் நடைபெறவிருந்த விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

‌இதனிடையே, விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை வரும் 5-ம் தேதி சந்திக்கவிருப்பதாகவும் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com