“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி

“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி

“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி
Published on

விவசாயிகள் தங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை கண்ணின் இமைபோல பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் 2ஆவது நாளாக சிறப்பு குறை தீர்வு கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதியவர்களே அதிகளவு மனுக்களை கொடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டு தொடங்கிய குடிமராமத்துப் பணிகள் விவசாயிகளை உள்ளடக்கியதே என்றும், பருவகாலத்தில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகக் கூடாது என்பதுதான் குடிமராமத்து பணிகளின் நோக்கம் என‌வும்‌ அவர் கூறினார். ஊராட்சி பகுதிகளில் இருக்கும் சிறு குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க ஆயிரத்து 250 கோடி ரூபாயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை ‌அவர்களே சேமிக்கும் நிலையை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், கண்ணுக்கு இமை எப்படியோ, அதுபோன்று தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு விவசாயிகளும், பொதுமக்களும் பாதுகாப்பாக ‌இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிக‌ழ்ச்சியின்போது, பொதுமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று முதலமைச்சரிடம் மனுக்களை அளித்தனர். ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று நடைபெறும் கு‌றைதீர்ப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com