சொந்த வீடு கட்ட பெட்டியில் பணம் சேர்த்த குடும்பம்: 5 லட்ச ரூபாயை கரையான் அரித்த சோகம்

சொந்த வீடு கட்ட பெட்டியில் பணம் சேர்த்த குடும்பம்: 5 லட்ச ரூபாயை கரையான் அரித்த சோகம்
சொந்த வீடு கட்ட பெட்டியில் பணம் சேர்த்த குடும்பம்: 5 லட்ச ரூபாயை கரையான் அரித்த சோகம்

சொந்தவீடு கட்டுவதற்காக இரும்பு பெட்டியில் சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை கரையான் அரித்துவிட்டதால் ஒரு குடும்பமே கண்ணீர் கடலில் தத்தளித்து வருகிறது.

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மைலவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜமாலியா. பன்றி மேய்த்து பிழைப்பு நடத்திவந்த இவர், அதன் மூலம் கிடைத்த வருவாயை சிறுக சிறுக இரும்புப் பெட்டியில் சேமித்து வந்துள்ளார். சொந்தவீடு கட்ட வேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்காக கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் வரை சேமித்த அவர் சேமித்த இரும்பு பெட்டியை நெடுநாட்களாக திறக்காமல் இருந்ததால் பணத்தை கரையான் அரித்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தற்போது சோகக் கடலில் மூழ்கியுள்ளார். கண்ட கனவை நிறைவேற்ற சேமித்து வைத்த பணத்தை கரையான் அரித்து விட்டதால் அரசு அவருக்கு இழந்த பணத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com