வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றவரை கண்டுபிடித்து தர குடும்பத்தினர் கோரிக்கை

வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றவரை கண்டுபிடித்து தர குடும்பத்தினர் கோரிக்கை
வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றவரை கண்டுபிடித்து தர குடும்பத்தினர் கோரிக்கை

வெளிநாட்டில் பணியாற்றும் தனது மகனை கண்டுபிடித்துத் தர வேண்டி குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுற்றுலா விசாவில் மலேசியாவிற்குச் சென்று அங்கு ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் மலேசியாவிற்குச் சென்ற பின்னர் நாள்தோறும் தனது குடும்பத்தோடு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பூமிநாதன் பேசிவந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 84 நாட்களுக்கும் மேலாக தனது குடும்பத்தாருடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாததாலும், பூமிநாதன் குறித்த எந்த தகவலும் இல்லாததாலும் அச்சமடைந்த குடும்பத்தாருக்கு அவர் உயிரோடு இருக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரின் நிலை குறித்து தமிழக அரசு அறிந்து அவரது உடலையாவது மீட்டுத் தரவேண்டும் என பூமிநாதனின் குடும்பத்தார் மற்றும் அவரது குழந்தைகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com